பேசுவதற்கு இடமளித்தால் உண்மை வெளிவரும் என்று, இலங்கை அரசாங்கம் அச்சமடைகிறது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு உட்பட ஒட்டுமொத்த பகுதிகளிலும் இலட்சக்கணக்கானோர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார். இயற்கை அனர்த்தத்தினை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இல்லாமல் அரசாங்கம் மக்களை படுகொலை செய்துள்ளது என, சாணக்கியன்
இராசமாணிக்கம் விமர்சித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவத்தில் தோல்வியடைந்துள்ளது என்று குற்றஞ்சாட்டி, எதிர்க்கட்சிகள் இலங்கையின் பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளன. இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தங்களின் முகாமைத்துவத்தில் அரசாங்கத்தின் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக
விமர்சித்துள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட சில எதிர்க்கட்சிகள் இந்த வெளிநடப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.