Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் 24 ஆயிரத்து 331 குடும்பங்கள் பாதிப்பு

நவம்பர் 29, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண கால நிலை காரணமாக அதிகலவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு தம்மை காப்பாற்றுமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க விமானப்படையின் உதவியை நாடியுள்ள போதும்,சீரற்ற காலநிலை காரணமாக குறித்த நடவடிக்கைகளும் இது வரை கைகூடவில்லை என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக அதிகலவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மன்னார் மாவட்டத்திற்காண இரு முக்கிய பாதைகளான மன்னார்- மதவாச்சி பிரதான பாதை மற்றும் மன்னார் யாழ்ப்பாணம் பிரதான பாதை ஆகியவை வெள்ள நீர் காரணமாக போக்கு வரத்துக்கள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மன்னார் மாவட்டம் ஏனைய மாவட்டங்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களை வெளியேற்ற முடியாத நிலையும் காணப்படுகின்றது.

தற்போது பெய்து வருகின்ற மழை மற்றும் வேறு மாவட்டங்களில் இருந்து குளங்களின் மேலதிக நீர் ஆகியவை பெருக்கெடுத்து மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களை தனித்து விட்டுள்ளது.

இதன் காரணமாக கூராய் மற்றும் குஞ்சுக்குளம் போன்ற பகுதிகளில் பல மக்கள் தனித்து விடப்பட்டுள்ள நிலையில் தம்மை காப்பாற்றுமாறு கூறி இருக்கின்றார்கள்.

அவர்களை படகு மூலம் அழைத்துச் செல்வதற்கு அதிக அளவான நீர் ஓட்டம் காரணமாக குறித்த நடவடிக்கை மிகவும் கடினமானதாக காணப்படுகின்றது.இதனால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க விமானப்படையின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.

தற்போது நீடித்துள்ள வானிலை மாற்றம் காரணமாக விமானப்படையின் உதவியும் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளும் கை கூடவில்லை.

இரண்டு தடவைகள் முயற்சி செய்து தற்போது வவுனியாவில் வானுர்தி தறித்து நிற்கின்றது. இவ்வாறாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதிலே முப்படையினர் பொலிஸாருடன் இணைந்து உரிய திணைக்களத்தினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 24 ஆயிரத்து 331 குடும்பங்களைச் சேர்ந்த 79 ஆயிரத்து 946 நபர்கள் அசாதாரண கால நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை விட 3 ஆயிரத்து 795 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 873 நபர்கள் 61 பாதுகாப்பு மையங்களிலே தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கான சமைத்த உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றது.

எனவே மக்கள் தமது பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரதேசச் செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலகர்களினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை பின் பற்றி செயல்படுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம். தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து சேகரிக்கும் நடவடிக்கைகளும் அதிகாரிகளினால் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

நன்கொடையாளர்கள் மற்றும் அரச சார்பாற்ற அமைப்புக்களின் உதவியுடன் உலர் உணவுகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற ஆறாக மல்வத்து ஓயா காணப்படுகின்றது.தற்போது அபாய கட்டமாக 19 அடிக்கு நீர் பாய்ந்து கொண்டு இருக்கின்றது.

அதன் காரணமாக ஆற்றங்கறையுடன் காணப்படுகின்ற அனைத்துக் கிராமங்களும் தற்போது வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.அதனை விட பாலியாறு, பரங்கியாறு போன்றவையும் அதிக அளவு நீரை வெளியேற்றுவதினாலும் மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியூடான போக்குவரத்துக்கள் முழுமையாக துண்டிக்கப் பட்டுள்ளது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள சுமார் 400 இற்கும் மேற்பட்ட குளங்கள் அனைத்தும் நிரம்பி நீர் பாய்ந்து கொண்டு இருக்கின்றது.மாகாண திணைக்களத்திற்குச் சொந்தமான சன்னார் குளம் உடைப்பெடுத்துள்ளதன் காரணமாக விவசாயிகளுக்கு பாரிய அளவில் பாதீப்பையும் ஏற்படுத்தியுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி வவுனியாவில் 1118 குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்கங்களில் தங்கவைப்பு
அடுத்த செய்தி மீட்புப் பணிகள் தீவிரம் – 24,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் பணியில்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடலில் மிதந்து வந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் அழகுசாதன பொருட்கள்

டிசம்பர் 5, 2025
இலங்கை

கொழும்பு பங்குச் சந்தையில் வீழ்ச்சி!

ஆகஸ்ட் 25, 2025
இலங்கை

சாவகச்சேரி வைத்தியசாலையின் வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை – ஆ.கேதீஸ்வரன்

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழ் பல்கலை விரிவுரையாளர்கள் பகிஸ்கரிப்பு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?