நேற்று நள்ளிரவு முதல் முல்லைத்தீவு மாவட்டடத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் முழுமையாக தடைப்படுள்ளதுடன் தொலைத்தொடர்பு கோபுரங்களும் செயலற்று போயுள்ளதாகவும் தொடர்சியாக பெய்துவரும் கடும் வெள்ளத்துக்கு மத்தியில் இடர்கள் ஏற்பட்டாலும் உரிய உதவி பெறுவதற்கு யாரையும் தொடர்பு கொள்ளமுடியாத நிலையில் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
15 மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் செயலற்று போயுள்ளதால் இழப்பு மற்றும் சேத விபரங்கள் தொடர்பாக முழுமையான தகவல்கள் எவையும் உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை.
வட்டுவாகல் பாலம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் A35 வீதி வட்டுவாகல் பாலத்துடன் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பபுலவு ஊடாக முல்லைத்தீவு செல்லும் பாதையும் முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.


