நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அதிக மின் தடங்கல்களினால் மின்சார சபையின் அனைத்து வாடிக்கையாளர் அழைப்பு நிலையங்களும் நெரிசல் நிலையில் உள்ளன.
இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள மின் தடங்கல் மற்றும் முக்கிய மின் தடங்கல் தொடர்பான முறைப்பாடுகளை அழைப்பு நிலையங்கள் ஊடாக தெரிவிப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டியுள்ளது.
எனவே உங்களது வீட்டிலோ அல்லது பிரதேசத்திலோ ஏற்படும் மின் தடங்கல்களை முறையிடுவதற்கு டிஜிட்டல் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
1987- குறுந்தகவல் சேவை
CEBCare – கையடக்கத் தொலைபேசி செயலியூடாக
CEBCare – இணையத்தள செயலியூடாக
– https://ceb.lk/report – இணையப் பக்கம் ஊடாக


