Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பொது போக்குவரத்துகளுக்கு விசேட அறிவிப்பு

நவம்பர் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

சீரற்ற காலநிலையினால் பொது போக்குவரத்து சேவைகளில் ஈடுபடும் பேருந்து சாரதிகளுக்கும் நடத்துநர்களுக்கும் தேசிய போக்குவரத்து உரிமையாளர்கள் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் விசேட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலையின் காரணமாக வீதி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் சந்தர்ப்பங்களில், பேருந்து பயணிக்கும் வீதிகளில் பொலிஸ் வீதித் தடைகள் விதிக்கப்பட்டிருக்குமாக இருந்தால் அந்த இடத்தில் கடமையிலிருக்கும் பொலிஸ் அதிகாரிகளின் ஆலோசனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

வெள்ளப்பெருக்கு காரணமாக வீதி தெளிவாக இல்லாத இடங்களில் எக்காரணம் கொண்டும் பேருந்து பயணிக்க கூடாது என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறது.

பாதகமான வானிலை காரணமாக மாற்று வழிகளைப் பயன்படுத்தும்போது, ​​பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு அது குறித்துத் அறியப்படுத்த வேண்டும் என்பதுடன், மேலும் மாற்று வழிகளைப் பயன்படுத்தும்போது பயணிகளை அவர்கள் செல்ல வேண்டிய இடங்களை நோக்கி அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலை இருந்தால், அதைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தி அருகிலுள்ள பிரதான பேருந்து நிலையத்துக்கு அவர்களை அழைத்துச் செல்லுமாறும், முடிந்தவரை பயணிகளை அவர்கள் செல்லவேண்டிய இடத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

மழைக்காலங்களில் சாரதிகள் பேருந்தின் வேகம் குறித்து குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும. மேலும் எந்த வகையிலும் அதிக வேகத்தில் பேருந்தை ஓட்டக்கூடாது. மேலும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பேருந்துகளை இயக்கும்போது பரிந்துரைக்கப்பட்ட வேக வரம்புகளுக்குள் பேருந்தை செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், மாற்று வழிகளைப் பயன்படுத்தும்போது மிகவும் வளைந்த வீதிகள், செங்குத்தான வீதிகள் மற்றும் குறுகிய வீதிகளில் வாகனம் ஓட்ட வேண்டியிருக்கும் என்பதால், சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கவனமாக இருக்குமாறு குறிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த மோசமான வானிலை நிலைகளிலும் பாதுகாப்பான மற்றும் தரமான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்காக பயணிகள் வரவேற்கத்தக்கது என்றும், தேவைப்படும் போதெல்லாம் தேசிய போக்குவரத்து ஆணையக்குழுவின் 1955 என்ற நேரடி அழைப்பு இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மலையகத்தில் கடும் பாதிப்பு
அடுத்த செய்தி மின் தடங்கல் தொடர்பான முறைப்பாடுகளுக்கு டிஜிட்டல் வழிமுறைகள் அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வவுனியாவில் கலாசார பாரம்பரியத்துடன் எளிமையான முறையில் சுதந்திர தின நிகழ்வு.

பிப்ரவரி 4, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்….

மார்ச் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தோணி கவிழ்ந்து விழுந்ததில் இருவர் உயிரழப்பு!

ஜூன் 1, 2025
இலங்கை

தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பில் அவதானம்!

செப்டம்பர் 7, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?