கொழும்பு – காலிமுகத்திடலில் நீராடச் சென்று நீரில் மூழ்கிய இருவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘போர்ட் சிட்டி’ வளாகத்தில் இருந்து படகு உதவியுடன் மீட்கப்பட்டு இரண்டு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சையின் பின்னர் ஒருவர் காப்பாற்றபட்ட நிலையில் மற்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரனைகளில் உயிரிழந்தவர் டயகமவைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.


