இந்தோனேசியாவின் கடுமையான மழைப்பொழிவால் அங்குள்ள மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மத்திய ஜாவா மாகாணத்தில் உள்ள மூன்று கிராமங்களில் ஏற்பட்ட மண்சரிவால் 12 வீடுகள் இடிந்துள்ளது.
இந்நிலையில் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் 21 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணிகளை மீட்பு படையினர் முன்னெடுத்து வருவதாக தேசிய பேரிடர் முகாமைத்துவ செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
