தங்காலை சீனிகம பகுதியில் 5 கிலோகிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களை 7 நாட்கள் தடுப்புக்காவலில் விசாரிக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 7 ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் 30,954 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 693 நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
