மிகவும் மோசமான அரசியலமைப்பு திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட போதெல்லாம், அவற்றுக்கு ஆதரவு அளித்தோர் மத்தியில் ஒருபோதும், மனோ கணேசன் இருந்தது இல்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்ட உரையின் போதே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி எம்.பிக்களை விளித்து சிரித்தவாறு கருத்துகள் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
