பணியின் போது உயிரிழந்த ஊழியர்களைக் கௌரவிக்கும் வகையில், கனடாவின் சீர்திருத்த சேவை (CSC), நீண்டகாலமாக எதிர் பார்க்கப்பட்ட தேசிய நினைவகம் ஒன்றை திறந்து வைத்துள்ளது.
இந்த நினைவகம் ஒன்டாரியோவின் கிங்ஸ்டன் பகுதியில் அமைந்துள்ளது. இந்த தேசிய பயிற்சி அகடமிக்கு வெளியே அமைந்துள்ள இந்தக் கம்பீரமான நினைவகம், 35 சீர்திருத்த சேவை ஊழியர்களின் பெயர்கள் மற்றும் முகங்களைக் கொண்டுள்ளது.
அவர்களது தியாகத்தைப் போற்றும் இந்த நிரந்தர இடமானது குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர் மறக்கப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கையை இந்த நினைவகம் வழங்குமென நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
