யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் , பெண் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், 2 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஆணும், 2 கிராம் 150 மில்லி கிராம் ஹெரோயினுடன் பெண்ணும் 80 மில்லி கிராம் ஹெரோயினுடன் மூன்று ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
இதேவேளை யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பணையில் ஈடுபடும் நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளார்.
பொலிஸாருக்கு எஇடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியில் கைது செய்யப்பட்டதுடன் , போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
