நாட்டில் பெருந்தோட்ட பிரிவுகளில் சனத்தொகை வீழ்ச்சிப் போக்கைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சனத்தொகை குறித்த கணக்கெடுப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வெளியிட்டது.
குறித்த அறிக்கையில் பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அதன்படி, பெருந்தோட்ட பிரிவுகளில் 35,968 இனால் சனத்தொகை வீழ்ச்சிப் போக்கைப் பதிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.
