ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டிருந்த மேலும் நான்கு இறந்த பணயக்கைதிகளின் உடல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இறந்த அனைத்து பணயக்கைதிகளின் உடல்களையும் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து இஸ்ரேல் கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாபகுதியில் தற்போது நிலவும் சூழ்நிலையால் இந்த உடல்களை ஒப்படைப்பது சிக்கலாகியுள்ளது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
பணயக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்களின்படி, உயிர் பிழைத்த பணயக்கைதிகளை விடுவித்ததையடுத்து , இறந்தவர்களின் உடல்களை ஒப்படைப்பது தற்போது நடைபெற்று வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.
பணயக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்களின்படி, உயிர் பிழைத்த பணயக்கைதிகளை விடுவித்ததையடுத்து , இறந்தவர்களின் உடல்களை ஒப்படைப்பது தற்போது நடைபெற்று வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.
