தெஹிவளை ரயில் நிலைய வீதிக்கு அருகில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக மற்றொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர், துப்பாக்கிச்சூடு நடத்த வந்த மோட்டார் சைக்கிள் சாரதி எனத் தெரிவிக்கப்படுகின்றது. அவரிடமிருந்து 5 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஐந்து வாள்கள், ஒரு கத்தி மற்றும் 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றைப் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான கொஸ் மல்லி, பஸ் அசிதவை சுட்டுக் கொலை செய்ய 700,000 ரூபாய் கொடுத்ததாகத் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அந்தப் பணத்தில் 350,000 ரூபாயை ஒரே நேரத்தில் தனது கணக்கில் வைப்பிலிடப் பட்டதாகவும், மீதமுள்ள பணத்தை அவ்வப்போது பெற்றதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சந்தேக நபரின் வீட்டை சோதனை செய்தபோது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து வாள்கள் மற்றும் ஒரு கத்தி கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில், படோவிட்ட அசங்கவின் நெருங்கிய நண்பர்களான பொரலஸ்கமுவே தினுகவை கொலை செய்ய, கொஸ் மல்லி அவருக்கு ஆயுதங்களை வழங்கியதாகத் தெரியவந்தது. மேலதிக விசாரணையில், தெஹிவளை துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு சந்தேக நபர் தனது வீட்டை விட்டு வெளியேறி, தென் மாகாணத்தின் பல்வேறு இடங்களில் பதுங்கியிருந்ததாகத் தெரியவந்தது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஏழு நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
