மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இயங்கி வந்த கசிப்பு வியாபார நிலையத்தை புதன்கிழமை (01) இரவு முற்றுகையிட்ட பொலிசார் கசிப்பு வியாபரத்தில் ஈடுபட்ட வியாபாரி ஒருவரை 52 லீற்றர் கசிப்புடன் கைது செய்தனர்.
மட்டு தலைமையக பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து சம்பவ தினமான புதன்கிழமை இரவு தலைமையக பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் கல்லடி நாகதம்பிரான் வீதியில் இயங்கிவந்த வீடு ஒன்றை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன் போது அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆண் வியாபாரி ஒருவரை கைது செய்ததுடன் 52 லீற்றர் கசிப்பை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நேற்று வியாழக்கிழமை (2) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
