இலங்கையில் தற்போது சுமார் 19 பெண்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் 24 பெண்கள் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் 225 பெண்கள் தண்டனை பெற்ற கைதிகள் என்றும் 1,304 பெண்கள் தடுப்புக் காவலில் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை முழுவதும் உள்ள 10 சிறைகளிலுள்ள 1,529 பெண்களில் இவர்களும் அடங்குவர் என்று அவர் கூறினார்.
