கனடா அரசு, பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாக பிரதமர் மார்க் கார்னியின் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது, இரண்டு நாடுகளுக்கான தீர்வை நிலைநிறுத்த சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயல்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும்.
பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “பல ஆண்டுகளாக, இரண்டு நாடுகளுக்கான தீர்வு பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டப்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கனடாவின் இந்த முயற்சி அமைந்துள்ளது,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கம் ஒரு பாலஸ்தீன அரசு நிறுவப்படுவதற்கான வாய்ப்பை திட்டமிட்டுத் தடுத்து வருகிறது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் அமைதியான எதிர்காலத்தை உருவாக்க கனடா தனது பங்களிப்பை வழங்குவதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
