நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கையில் இதுவரை 714 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, நேரடியாகக் குற்றங்களில் ஈடுபட்ட 19 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 38 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களில் இலங்கை கடற்படையினர் உள்நாட்டு கடற்பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது
சட்டவிரோதமான முறையில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 78 உள்ளூர் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள் உள்ளிட்ட முறைகளைப் பயன்படுத்தி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளிலும், காரைதீவு முதல் நிந்தவூர் வரையிலான கடல் பகுதியிலும், நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
