தனமல்வில பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்பனை செய்ததன் அடிப்படையில் சந்தேக நபரான வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சிகரெட்டுகளை பாடசாலை மாணவர் ஒருவருக்கு 100 ரூபாவுக்கு குறித்த வர்த்தகர் வழங்கியதோடு, அம் மாணவர் அச் சிகரெட்டை 200 ரூபாவுக்கு பாடசாலையில் விற்பனை செய்ததாக தெரிய வந்துள்ளது.
குறித்த பாடசாலையின் இன்னொரு மாணவர் அதிபருக்கு அளித்த முறைப்பாட்டுக்கமைய சிகரெட்டுகளை விற்பனை செய்த மாணவனை அழைத்து வந்து சோதனை செய்தபோது, மாணவனிடமிருந்து இரண்டு வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து தனமல்வில பொலிஸ் பரிசோதகருக்கு அளித்த முறைப்பாட்டுக்கமைய குறித்த வர்த்தகரின் வர்த்தக நிலையம் சோதனை செய்யப்பட்டு அங்கிருந்த 690 சிகரெட்டுகளும் சிகரெட்டுகளை விற்று ஈட்டிய 360,000 ரூபாய் பணமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபரான வர்த்தகர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
