2025 ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டியில் தற்சமயம் இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பாடிய ஹொங்கொங் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் நிஸாகட் கான் 52 ஓட்டங்களையும், அன்ஷி ராத் 48 ஓட்டங்களையும் ஹொங்கொங் அணி சார்பில் அதிகபடியாக பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹசரங்க மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இந்தநிலையில், 150 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பாட தாயாராகி வருகிறது.
