கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் (2023/2024) உயர் சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கு இன்று (14) புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.
கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த உயர்தரப் பரீட்சையில் 6 பாடப் பிரிவுகளின் கீழ் உயர் சித்திகளைப் பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு மாணவருக்கும் தலா 100,000 ரூபாய் வழங்கப்பட்டது.
ஜனாதிபதி நிதியம் இதற்காக 36.1 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளது.
புலமைப்பரிசில் வழங்கும் குறித்த நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
