Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

49 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு கௌரவிப்பு!

செப்டம்பர் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

49 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற வீர வீராங்கனைகள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களால் கௌரவிப்பு

இலங்கையின் 49 வது தேசிய விளையாட்டுப் போட்டி கடந்த மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதிவரை கொழும்பில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் சார்ப்பாக குத்துச் சண்டைப் போட்டியில் பங்குபற்றிய பூதன்வயல் கிராமத்தினைச் சேர்ந்த செல்வி ச.யஸ்மிதா முதலாம் இடம்பெற்று தங்கப்பதக்கத்தினை சூவீகரித்தார்.

தொடர்ந்து உடையார்கட்டு கிராமத்தினைச் சேர்ந்த செல்வி இ.லதுர்சனா குத்துச்சண்டைப் போட்டியில் மூன்றாம் இடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினை தட்டிச் சென்றனர்.

மேலும் ஆண்களுக்கான கடினப்பந்துப் போட்டியில் வடமாகாண அணி தேசிய விளையாட்டு விழாவில் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. இதில் முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையை சேர்ந்த அ.அஞ்சயன் அவர்கள் வடமாகாண அணியில் இடம்பிடித்து சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த சாதனையை புரிந்த மூன்று வீர வீராங்கனைகளையும் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு .அ.உமாமகேஸ்வரன் அவர்கள் மாவட்ட செயலகத்திற்கு வரவழைத்து இவர்களை கௌரவித்து பாராட்டினார்.

இதன்போது குத்துச்சண்டையில் வெற்றிபெற காரணமாக இருந்த குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர்களான திரு.கா.நாகேந்திரன், திரு.ய.தேசிந்தன் ஆகியோரும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

மாவட்ட செயலக காலை ஒன்றுகூடலின் போது இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன்(நிர்வாகம்), மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.ஜெயக்காந்(காணி), மாவட்ட பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், மாவட்ட பிரதம கணக்காளர், சிரேஷ்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

முந்தைய செய்தி யாழில் பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக, 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்!
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.பொது நூலக நிறுவுநரின் 130 ஆவது ஜனன தினம்

பிப்ரவரி 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழப்பு…

மே 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வாழைச்சேனை ஹரோயின் போதை பொருளுடன் பெண் வியாபாரி ஒருவர் கைது

ஆகஸ்ட் 5, 2025
இலங்கை

இரண்டாவது நாளாக பதுளை நடுகார கந்த வனப்பகுதியில் இன்றும் தீ!

ஆகஸ்ட் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?