யாழ்ப்பாணத்தில் நேற்று வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக, 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.
அதேபோல, உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடு ஒன்றும் சிறு சேதமடைந்துள்ளது.
மேலும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இதேவேளை, திடீரென வீசிய புயல் காற்றினால் செல்வச் சன்னிதி ஆலயத் திருவிழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளின் கூரைகளும் தூக்கி வீசப்பட்டன.
இதனால் வியாபாரிகள் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
