இந்தியப் பிரதமரின் தாயாரை அவமதிக்கும் வகையில் எழுந்த அரசியல் சர்ச்சை குறித்த மாநிலங்கள் அவையின் உறுப்பினர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர் ஒருவர் இந்தியப் பிரதமரின் தாயாரை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள் பிரமரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அழுத்தம் காணப்பட்டது.
இந்தநிலையில்,குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கமல்ஹாசன், அரசியலில் யாரையும் அவமதிக்கவோ, திட்டுவதற்கோ தேவை ஏற்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன்,வாக்காளர் பட்டியலிலிருந்து தனது பெயர் காணாமல் போனமை தொடர்பான நீண்டகால பிரச்சினையுடன் இந்த பிரச்சினையை தொடர்புப்படுத்தி பேசியதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.