உக்ரைனில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சமீபத்தில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல் உக்ரைனில் உள்ள பல எரிசக்தி பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் கிட்டத்தட்ட 60,000 வீடுகள் மற்றும் வணிகங்கள் மின்சாரத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைனின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்வதாகவும், புதிய தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி தனது “X” கணக்கில் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடெசா பிராந்தியத்தில் உள்ள பல எரிசக்தி மையங்களை நான்கு ட்ரோன்கள் தாக்கியதாக உக்ரைனின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான D TEK தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல்களினால் பல வீடுகள் மற்றும் அரச அலுவலக கட்டிடங்களும் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
