நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் உள்ள அனாபோலிஸ் கவுண்டியில் கட்டுப்பாடின்றி எரிந்து வரும் காட்டுத்தீயால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணியில் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அங்கு மிகவும் அபாயகரமான சூழ்நிலை நிலவுவதால், எத்தனை வீடுகள் சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டன என்பதை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை.
இப்பகுதி மிகவும் வெப்பமாகவும், புகையுடனும் இருப்பதால், சேதங்களை மதிப்பிடுவதற்குப் பாதுகாப்பற்றதாக உள்ளது என, நோவா ஸ்கோஷியாவின் அவசரகால முகாமைத்துவத் துறையின் பிராந்திய செயல்பாட்டு இயக்குநர் ஆண்ட்ரூ மிட்டன், தெரிவித்தார்.
இயற்கை வளங்கள் துறையிடம் இருந்து உரிய அனுமதி கிடைத்த பின்னரே, தனது குழுவினர் சேதங்களை மதிப்பிடும் பணிகளைத் தொடங்குவார்கள் என்று, அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, காட்டுத்தீயினால் வீடுகளை இழந்த அனைவருக்கும் காப்பீடு தொடர்பான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று அனாபோலிஸ் கவுண்டி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
