கனேடிய மத்திய அரசின் நிதி உதவியுடன் கூடிய தேசிய மருந்தகத் திட்டமானது ஒரு சில மாகாணங்களுக்கு மட்டுமே பிரத்தியேகமான சலுகையாக மாறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது பிரிட்டிஷ் கொலம்பியா, மனிடோபா, பிரின்ஸ் எட்வர்ட் தீவு (P.E.I.) மற்றும் யூகோன் ஆகிய நான்கு மாகாணங்கள் மற்றும்
பிராந்தியங்கள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
மற்ற மாகாணங்களுக்கு இந்தத் திட்டம் எப்போது விரிவுபடுத்தப்படும் என்பது குறித்து, கனேடிய மத்திய அரசு தெளிவான பதிலை அளிக்க மறுத்து வருகிறது.
மத்திய அரசின் நிதி உதவியால், சில தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், தங்கள் காப்பீட்டுப் பட்டியலில் இருந்து இந்த மருந்துகளை நீக்கிவிட்டமை இந்த திட்டத்தின் சவாலாக உள்ளது.
இந்தத் திட்டம் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தற்போது வரை, கனடாவின் சுகாதாரத் துறை மனிடோபாவிற்கு $26 மில்லியனும், பி.இ.ஐ.க்கு $3 மில்லியனும் நிதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
