நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் உள்ள அன்னாபொலிஸ் கவுண்டியில் கட்டுப்பாட்டை மீறிப் பரவி வரும் காட்டுத்தீ, 400 ஹெக்டேருக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறும்படி அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கியதால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
வெளியேறும் மக்கள் 72 மணி நேரத்திற்கான அத்தியாவசியப் பொருட்களான மருந்துகள், அடையாள அட்டைகள் மற்றும் சாவிகள் முதலானவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், அவர்கள் தங்களை பிரிட்ஜ்டவுன் தீயணைப்பு நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
