இலங்கை மத்திய வங்கி, ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பகுதிக்கான (ஜூலை முதல் டிசம்பர் வரை) உறுப்பினர் கணக்கு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கைகள், 2024 டிசம்பர் 31 வரையிலான முடிவு இருப்பு மற்றும் பங்களிப்பு விவரங்களை உள்ளடக்கியவையாகும்.
இந்த அறிக்கைகள் ஏற்கனவே நிர்வாக தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், உறுப்பினர்கள் தங்கள் புதுப்பிக்கப்பட்ட அறிக்கைகளை நிர்வாக தலைவர்களிடம் பெறுமாறு மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
பெயர்கள், தேசிய அடையாள அட்டை எண்கள் (NIC), அல்லது வரவு வைக்கப்பட்ட பங்களிப்புத் தொகையில் ஏதேனும் முரண்பாடுகள் இருப்பின், உறுப்பினர்கள் 0112-206690 என்ற தொலைபேசி எண்ணிற்கு அல்லது epfhelpdesk@cbsl.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யலாம்.
மேலும், 2024 ஆம் ஆண்டிற்கு EPF உறுப்பினர் இருப்புத் தொகைகளுக்கு 11% வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது, இது தொழிலாளர் மற்றும் நிதி அமைச்சர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது.
