பேருந்து அட்டவணையில் கையொப்பமிடுவதற்காக, ஒரு பயணத்திற்கு ரூபாய் 200 இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் பொரளை மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் நேரக் கண்காணிப்பாளர் ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெய்யன்துடுவ பகுதியைச் சேர்ந்த ஒரு நடத்துநர் அளித்த புகாரின் அடிப்படையில், கடுவெல பேருந்து நிலையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
பேருந்தின் இயக்க நேரத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் திட்டமிடப்பட்ட அனைத்துப் பயணங்களையும் வழங்குவதற்கு ஈடாக அவர் இலஞ்சம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
