இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸாவிற்குள் இராணுவத்துடன் அதிக வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிட அனுமதிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் – காஸா போர் ஆரம்பமானதிலிருந்து இஸ்ரேல் தனது பிரசாரத்தைத் தொடங்கியது , இதன்போது பெரும்பாலான வெளிநாட்டு நிருபர்கள் காஸா பிரதேசத்தை சுயாதீனமாக அணுகுவது தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தடுக்கப்பட்டதற்கு அதிகாரிகள் பெரும்பாலும் பாதுகாப்பை ஒரு காரணமாகக் குறிப்பிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அந்நிலைமை மாறியுள்ளதுடன் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் காஸா பகுதியில் செய்தி வெளியிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் கூறுகையில்,
அதிக வெளிநாட்டு பத்திரிகையாளர்களை, அழைத்து வர நாங்கள் முடிவு செய்து உத்தரவிட்டுள்ளோம்.
பாதுகாப்பை உறுதி செய்வதில் ஒரு சிக்கல் உள்ளது, ஆனால் உங்கள் சொந்த பாதுகாப்பை பாதுகாக்க பொறுப்புடனும் கவனமாகவும் இருக்கும் வகையில் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
