இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்தவரான ஹர்சிம்ரத் (Harsimrat Randhawa, 21) என்னும் 21 வயதுடைய இளம்பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்
குறித்த பெண் கனடாவில் கல்வி நடவடிக்கைகளுக்காக வருகை தந்திருந்தார்
மேலும் பகுதி நேர பணி செய்துவந்த குறித்த பெண் , ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி இரவு 7.30 மணியளவில், ஹாமில்ட்டன் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்திருந்த வேளை இரு குழுக்களுக்கிடையிலான ,மோதல் இடம்பெற்ற நிலையில் இவர் மீது குண்டு பாய்ந்தது
துப்பாக்கியால் சுட்டவர்கள் தப்பியோடிய நிலையில் , மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹர்சிம்ரத், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
ஹர்சிம்ரத் உயிரிழக்கக் காரணமாக இருந்த நபர்களில் ஒருவர் செவ்வாயன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர்.
ஒன்ராறியோவிலுள்ள நயாகரா ஃபால்ஸ் என்னும் இடத்தில் கைது செய்யப்பட்ததாக பொலிஸார் தெரிவித்தனர்
அவர் மீது ஒரு கொலைக்குற்றச்சாட்டும், மூன்று கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து, North Yorkஇல் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது மூன்று கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் குறைந்தது ஏழு பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் கருதும் நிலையில், மற்றவர்களையும் பிடிக்க பொலிசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுவருகிறார்கள்.