பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட்வீரர் ஹைதர் அலி இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் வம்சாவளி பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 23-ஆந் திகதி மன்செஸ்டரில் உள்ள வணிக வளாகத்தில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து ஹைர் அலியை கைது செய்த பொலிஸார் அவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்து அவரை பிணையில் விடுவித்துள்ளதாக தெரிவித்தனர்.
‘ஏ’ அணியில் இடம்பெற்றிருந்த 24 வயதான ஹைதர் அலி மீது கூறப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.
பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணி இங்கிலாந்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
