இராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சாகர்மாலா திட்டத்தின் கீழ் 118 கோடி ரூபாய் செலவில் விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் அனுமதிக்காக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இராமேஸ்வரத்தில் 4.19 ரூபாய் கோடி செலவில் புதிய துறைமுக அலுவலகத்தை திறந்து வைத்து அவர் இதனை தெரிவித்தார்.
