காஸாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கான தனது அழைப்பை பாப்பரசர் லியோ மீண்டும் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச சமூகம் சர்வதேச சட்டங்களையும் பொதுமக்களைப் பாதுகாக்கும் கடமையையும் மதிக்க வேண்டும் என்று பாப்பரசர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தப் போரின் காட்டுமிராண்டித்தனத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், மோதலுக்கு அமைதியான தீர்வு காணவும் நான் மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுக்கிறேன்,” என்று காஸ்டல் காண்டால்போவில் ஏஞ்சலஸ் பிரார்த்தனையின் முடிவில் பாப்பரசர் லியோ தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“மனிதாபிமான சட்டத்தைக் கடைப்பிடிக்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கும் கடமையை மதிக்கவும், கூட்டுத் தண்டனையைத் தடை செய்தல், கண்மூடித்தனமான பலாத்காரத்தைப் பயன்படுத்துதல் மற்றும் மக்களை கட்டாயமாக இடம்பெயர்த்தல் ஆகியவற்றை மதிக்கவும் சர்வதேச சமூகத்திடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
