பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் வேலு பிரபாகரன் இன்று காலமானார்.
இவர் 1980 ஆம் ஆண்டு வெளியான ‘இவர்கள் வித்தியாசமானவர்கள்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் ‘நாளைய மனிதன்’, ‘அதிசய மனிதன்’, ‘உத்தமராசா’, ‘அசுரன்’ உட்பட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
1989 ஆம் ஆண்டு அவர் ‘நாளைய மனிதன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில், அதனை அடுத்து ‘அதிசய மனிதன்’, ‘அசுரன்’, ‘ராஜாளி’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். அவரது இயக்கத்தில் வெளியான ‘கடவுள்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், இந்தப் படத்தில் அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவர் ‘கஜானா’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 12:20 மணிக்குக் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
