மீரிகம-பஸ்யால பிரதான வீதியில் மல்லெஹெவ பகுதியில் நடந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
தனியார் பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் பலத்த காயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட வேளையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 35 வயதுடைய அமிதிரிகல மற்றும் தெஹியோவிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பல்லேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


