யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் இன்றைய தினம் புதன்கிழமை நயினாதீவுக்கு சென்று, நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார்.
பூஜை வழிபாடுகளை தொடர்ந்து இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் திறந்து வைத்தார்.
