பாகிஸ்தானில் இன்று அடுத்தடுத்து 3 முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நில அதிர்வுகள் பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் பர்ஹாம் பகுதிகளில் பதிவாகியுள்ளது
இதன்படி இன்று அதிகாலை 3.54 மணியளவில் 5.3 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இரண்டாவது முறையாகக் காலை 8.02 மணியளவில் 4.5 மெக்னிடியூட் அளவிலும், காலை 11.21 மணியவில் 3.8 மெக்னிடியூட் அளவிலும் நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
ஒரே நாளில் மூன்று முறை நில அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
