கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலையுடன் தொடர்புடைய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாக உள்ள இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை எனவும் அவர் கூறினார்.
எனினும், மற்ற சந்தேகநபர்கள் மூலம் இஷாரா செவ்வந்தி பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த நீதிமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் எனவும், அதற்கு முன்னர் தாக்குதல் பற்றிய எந்த தகவலும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் கூறினார்.
எனினும், கனேமுல்ல சஞ்ஜீவவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
