Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

16 வருடங்களாக மகனை தேடி அலையும் தாய்!

ஜூன் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பதவியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் வைத்தியசாலையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்  மகனை தேடி 16 வருடங்களாக அலைந்து திரிந்தும் மகன் தொடர்பான எந்த தகவலும் தனக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

செம்மணி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ள அணைய தீபம் போராட்டத்தில் கலந்து கொண்ட கிளிநொச்சி இரணைமடு பகுதியை சேர்ந்த சுரேந்திரன் பரமேஸ்வரி என்பவரே அவ்வாறு தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த கால பகுதியில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி எனது மகனான சுரேந்திரன் சுதாகரனுக்கு யுத்தத்தின் போது காலில் காயம் ஏற்பட்டது.
16ஆம் திகதி வரையில் அவருக்கு சிகிச்சை அளித்த நிலையில் 16ஆம் திகதி பதவியா வைத்தியசாலைக்கு என கப்பலில் அழைத்து செல்லப்பட்டார்.
நாங்கள் வவுனியா முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டோம்.
நாங்கள் முகாமில் இருந்த போதிலும் மகனை பற்றிய தகவல்களை அறிய முற்பட்டும் தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.
நாம் மீள் குடியேற்றப்பட்டு இரணைமடு பகுதி வந்த வேளை , பதவியா வைத்திய சாலையில் எமது மகனுக்கு 07 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மகனுடன் 07 நாட்களும் கதைத்ததாகவும், அதன் பின் 08ஆவது நாள் காலையில் மகனை பார்க்க சென்ற வேளை , மகனை காணவில்லை எனவும் இருவர் எம்மிடம் தெரிவித்தனர்.
எனது மகன் வைத்தியசாலையில் 07 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தமைக்கு கண்கண்ட சாட்சியங்கள் உண்டு. எமது மகனுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்த கோரியே 16 வருடங்களாக நாங்கள் போராடி வருகிறோம்.
எனது மகன் வைத்தியசாலையில் உயிருடன் சிகிச்சை பெற்று வந்தமை தொடர்பான தகவல் அறிந்ததும், மனிதஉரிமை ஆணைக்குழு முதல் வவுனியா யோசப் இராணுவ முகாம் என பல இடங்களில் முறைப்பாடு செய்தும் தேடி அலைந்தும் வருகிறேன்.
“எனது மகனின் உயிருக்கு என்ன ஆனாது ?”  என்பதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று கோரியே 16 வருடங்களாக போராடி வருகிறேன் என தெரிவித்தார்.
முந்தைய செய்தி நோவா ஸ்கோஷியாவில் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது
அடுத்த செய்தி யாழில் பெண்னொருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில் நிலவும் சீரற்ற கால நிலை – சென்னை விமானம் தரையிறங்காது மீண்டும் திரும்பியது

டிசம்பர் 11, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்-11 ஏப்ரல் 2025

ஏப்ரல் 11, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

ஏப்ரல் 17, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

நுவரெலியா – பூண்டுலோயா பிரதான வீதியில் தொடரும் ஆபத்து!

டிசம்பர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?