Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!

ஜூன் 5, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் மற்றும் இராணுவத்தினருக்கு இடையிலான நல்லிணக்கத்தை அதிகரிக்கும் முகமாக கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்றது.

தள்ளாடி 54 வது காலாட்படை பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட வன்னி பிராந்திய கட்டளையிடும் தளபதியினால் கரப்பந்தாட்ட வெற்றி கிண்ண இறுதி நிகழ்வு நேற்றைய தினம்(4) புதன் கிழமை மாலை மன்னார் நகர சபை உள்ளக விளையாட்டரங்கில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய அணிகளும் அதே நேரம் இரண்டு இராணுவ அணி என இடம் பெற்ற குறித்த சுற்றுப்போட்டியில் மன்னார் பிரதேச செயலக அணி மற்றும் தள்ளாடி இராணுவ B அணியும் இறுதி போட்டிக்கு தெரிவாகிய நிலையில் அவர்களுக்கான போட்டி நேற்றைய தினம் புதன்கிழமை (4) இடம்பெற்றது.

குறித்த போட்டியில் மன்னார் பிரதேச செயலக அணியை ராணுவ அணியினர் வென்று 50.000 ரூபா பணப்பரிசு மற்றும் பதக்கங்களையும் பெற்றனர்.

அதே நேரம் வன்னி கட்டளையிடும் தளபதி வெற்றி கிண்ணத்தையும் தமதாக்கிக் கொண்டார்.

இரண்டாம் இடத்தை பெற்ற மன்னார் பிரதேச செயலக அணிக்கு 25,000 ரூபா பணப் பரிசும் பதக்கங்கள் பதகங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வன்னி பிராந்திய தலைமை கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் பிரதீப் குலதுங்க , சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன்,கெளரவ விருந்தினர்களாக பிரதேச செயலாளர்கள்,ராணுவ தளபதிகள்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் முகமாகவும் , இராணுவம், பொதுமக்கள், அரச அதிகாரிகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக பல்வேறு நிகழ்வுகள் இராணுவத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

 

 

முந்தைய செய்தி வவுனியாவில் வீட்டு வளாகத்தில் இருந்து முதலை மீட்பு!
அடுத்த செய்தி மன்னார் சதோச மனித புதைக்குழி தொடர்பில் சில தீர்மானங்கள் முன்னெடுப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். பட்டப்பகலில் இளைஞன் வெட்டி கொலை!(video இணைப்பு )

நவம்பர் 30, 2025
இலங்கை

இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்ப்பு!

ஆகஸ்ட் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காசல் மகளிர் வைத்தியசாலையில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

நவம்பர் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் மாநகர கழிவகற்றலில் பெரும் ஊழல் மோசடிகள்!

ஜூலை 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?