நைஜீரியாவின், ஓகுன் மாகாணத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்கு , தடகள வீரர்களுடன் கானோ நகருக்குத் சென்றுக் கொண்டிருந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தின் போது பேருந்தில் 35 பேர் பயணித்ததாகவும் விபத்தின் போது 21 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாக, வேகக்கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்
