உலகில் பல நாடுகளில் தீவிரவாதம் தலை தூக்கியுள்ளது. இதன்படி பாகிஸ்தானில் தீவிரவாதத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில்
பாகிஸ்தானின் பஞ்சாப்பில் 34 ஆயுததாரிகளை தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தீவிரவாதம் பற்றி கிடைத்த தகவலுக்கு அமைய தீவிரவாத தடுப்பு பிரிவினர் 415 சோதனைகளை நடத்தினர்.
இந்த தேடல் சோதனையில் 34 ஆயுததாரிகள் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து 5,841 கிராம் வெடிபொருள்கள், 19 டெட்டனேட்டர்கள், 51 அடி நீளமுள்ள பியூஸ் கம்பி, கைக்குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


