பங்களாதேஷில் விரைந்து தேர்தலை நடத்துமாறு இடைக்கால ஆட்சியாளர் முகமது யூனுஸுக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில் அந்நாட்டு அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தவறு செய்யும் அரச ஊழியர்கள் மீது பணிநீக்கம் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வழி செய்யும் புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து முன்னெடுக்கப்படும் போராட்டத்தால் பல பகுதிகளில் நிர்வாகம் முடங்கியுள்ளது.
இன்னொருபுறம் அரசின் பாராமுகம் காரணமாக தொழில்துறை முடங்கி விட்டதாகவும், பொருளாதாரம் கேள்விக்குறியாகி விட்டதாகவும் பெரும் பஞ்சம் நெருங்கி வருவதாகவும், அத்துறையின் கூறுகின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாடு, உற்பத்தி செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களினால் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டதாகவும் இன்னும் பல நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 1971ம் ஆண்டில் நாடு உருவானபோது நிலவிய குழப்பங்கள் நெருக்கடிகள் தற்போது திரும்பியுள்ளதாவும் அவர்கள் கூறுகின்றனர்.
