நடப்பாண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் போட்டி நடைபெற்று வருகின்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி பலரின் அபிமானம் பெற்றவராக மாறினார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிராக 35 பந்துகளில் சதம் விளாசி சாதனைப் படைத்தார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதன்போது சூர்யவன்ஷியை பிரதமர் நரேந்த்திர மோடி சந்தித்துள்ளதுடன், இருவரும் எடுத்த புகைப்படம் ஒன்றையும் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
மேலும் குறித்த வீரரை சந்தித்தது பற்றியும், அவரின் விளையாட்டு வேட்கை தொடர வேண்டும் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
