கனடாவின் நாடாளுமன்றத்தின் பொதுச்சபையின் (House of Commons) புதிய சபாநாயகராக, லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரான்சிஸ் ஸ்கார்பலெஜியா (Francis Scarpaleggia) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கியூபெக் மாகாணத்தின் லாக்-செயின்ட்-லூயிஸ் (Lac-Saint-Louis) தொகுதியிலிருந்து அவர், நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
பொதுத் தேர்தலின் பின்னர், கனேடிய நாடாளுமன்றம் இன்றைய தினம் முதல் தடவையாக கூடியது.
இதன் போதே, சபாநாயகர் தெரிவுக்கான வாக்கேடுப்பு இடம்பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட புதிய சபாநாயகரை, பிரதமர் கார்னி மற்றும் இடைக்கால எதிர்க்கட்சித் தலைவர் ஆண்ட்ரூ ஷீர் ஆகிய இருவரும் பொதுச்சபையில் உள்ள சபாநாயகரின் ஆசனத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கனேடிய நாடாளுமன்றப் பொதுச்சபையின் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கவும், விவாதங்களின் போது நடுநிலையான நடுவராகச் செயல்படவும், ஒழுங்கை நிலைநிறுத்தவும், சபாநாயகர் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
சபாநாயகர் ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரது பங்கு நடுநிலையானதாகக் கருதப்படுவதால், அவர் எந்தவொரு கட்சி கூட்டத்திலும் பங்கேற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


