ஈரானின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அறிவித்துள்ளது.
இதனால் சர்வதேசத்தில் கச்சா எண்ணெய்யின் விலை உயர ஆரம்பித்துள்ளதுடன், விலை 1%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது…
மசகு எண்ணெய் விலை பீப்பாய்க்கு 2 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதுடன், பிரெண்ட் மசகு எண்ணெய் 1 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
குறித்த தாக்குதல் இடம்பெற்றால் எண்ணெய்யின் விலை உயர்வதோடு எண்ணெய் உற்பத்தியானது பெரியளவில் பாதிக்கப்படும். இப்பாதிப்பு சர்வதேச ரீதியில் தாக்கத்தை உண்டாக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
