18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும்.
லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘ப்ளே-ஓப்’ சுற்றுக்கு முன்னேறும். ‘ப்ளே-ஓப்’ சுற்றை எட்டுவதற்கு 9 வெற்றிகள் தேவையாகும்.
இதுவரை எந்த அணியும் அடுத்த சுற்றை உறுதி செய்யவில்லை. இன்னும் 14 லீக் போட்டிகள் மட்டுமே எஞ்சியிருப்பதால் இனி ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் இன்றிரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறும் 57ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.