பாகிஸ்தானின் மூன்று இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் மேற்கொண்டிருந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பித்தன
இந்நிலையிலேயே இந்தியா, பாகிஸ்தான் மீது ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
மேலும் உரிய நேரத்தில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இதேவேளை இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” திட்டத்தின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் ஒன்பது இடங்களை குறிவைத்ததாக இந்திய ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன.